கோலங்கள் வரைகின்றாய்
அதிகாலை பணியிலும்
அழகு முகம் தாமரையாய் அதில்
சுடர் விடும் நெற்றிப் பொட்டழகு
கைகளில் குலுங்கும்
வண்ண வளை யழகு
நேர் வகிடெடுத்த
கூந்தலும் அழகோ அழகு
கண்டதும் காதல் கொள்ள
செய்யவில்லை பெண்ணே
உன் பாங்கும் தெய்வீக அழகும்
மதிப்பையே கூட்டுகின்றன
நாளையும் வருவாயென
காத்திருக்கின்றேன்
அதிகாலை மெல்லிய இருட்டின்
மெல்லிய குளிரின் தழுவலில்
உந்தன் மாக்கோலத்தில்
மொய்க்கும் எறும்புகள் கூட
உன்னை நிச்சயம்
அன்பு செய்யும்
இதமாக வீசும் காற்றும்
மெல்லியதாய் உன் கோலம்
கலையாமல் தொட்டு செல்லும்
இதோ .. பெண்ணே
நானும் எட்டிச் செல்கின்றேன்
உன் கோலத்தை பார்த்து
இரசித்தவனாய்
இன்னொரு பொழுது புலரும்
அப்போதும் வருவேன்
காதலனாக அல்ல
கைவண்ணத்தை இரசிக்கும்
இரசிகனாய்!
ஆக்கம்
அதிகாலை பணியிலும்
அழகு முகம் தாமரையாய் அதில்
சுடர் விடும் நெற்றிப் பொட்டழகு
கைகளில் குலுங்கும்
வண்ண வளை யழகு
நேர் வகிடெடுத்த
கூந்தலும் அழகோ அழகு
கண்டதும் காதல் கொள்ள
செய்யவில்லை பெண்ணே
உன் பாங்கும் தெய்வீக அழகும்
மதிப்பையே கூட்டுகின்றன
நாளையும் வருவாயென
காத்திருக்கின்றேன்
அதிகாலை மெல்லிய இருட்டின்
மெல்லிய குளிரின் தழுவலில்
உந்தன் மாக்கோலத்தில்
மொய்க்கும் எறும்புகள் கூட
உன்னை நிச்சயம்
அன்பு செய்யும்
இதமாக வீசும் காற்றும்
மெல்லியதாய் உன் கோலம்
கலையாமல் தொட்டு செல்லும்
இதோ .. பெண்ணே
நானும் எட்டிச் செல்கின்றேன்
உன் கோலத்தை பார்த்து
இரசித்தவனாய்
இன்னொரு பொழுது புலரும்
அப்போதும் வருவேன்
காதலனாக அல்ல
கைவண்ணத்தை இரசிக்கும்
இரசிகனாய்!
ஆக்கம்
0 Kommentare:
Kommentar veröffentlichen