இலங்கையில் பல்கலைக் கழக கல்வி என்பது 1942ல் ஆரம்பித்து இன்று 75 வருடங்களை கடந்துள்ளது.ஆனாலும் மக்கள் அபிலாசைகளை மனம் கொண்டு பாடத்திட்டங்களும் செயல் பாடுகளும் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பது பெரும் கேள்வியாக நம் முன் உள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மாணவர்களின் கல்வியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.பல்கலைக் கழக கல்வியயை சீரமைக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது.
பல்கலைக் கழக நிர்வாகம் என்பது ,உப வேந்தர் ,பதிவாளர் பேரவை,மூதவை,பீட அவை துறைசார் தலைமை என கல்விசார் நடவடிக்கைகளின் கட்டமைப்பாக உள்ளது.
இன்று பல்;கலைக் கழக பேரவைகள் வழி நடத்தப் படும் விதம் சர்வாதிகார மனோபாவத்துடன் செயல் படுத்தப் படுகின்றன.இதனால்; பல விரிவுரையாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் பட்டு மரணம் வரை சென்றமை பல்கலைக் கழகங்களின் நிர்வாக கட்டமைப்பில் கேள்விகளையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளன.
தகுதி வாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் வானளவு அதிகாரம் படைத்தவர்களாக செயல் பட்டமையும் அதனால் பலர் பாதிக்கப்படுகின்றமையும் நாம் செய்திகளாக அறிந்தவை.ஒரு முறை பதவியிலிருந்தவர்கள் வேறொரு வழியில் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு தங்கள் அதிகாரங்களை பயன்படுத்துவதும் தவிர்க்கப் பட வேண்டும்.
உப வேந்தர் பதவிகள் என்பது சர்வாதிகாரம் படைத்தது அல்ல அது மாணவர் நலம் சார்ந்தும் விரிவுரையாளர்கள், ஊழியர்கள் நலம் சார்ந்ததாகும்
0 Kommentare:
Kommentar veröffentlichen