மலர்வனச்சோலைஒன்று பூக்க
ஆயிரம்பட்டாம்பூச்சிகள் பறக்க
உனைக்கண்டேன் உந்தன்
எழிலில் எனை தொலைத்தேன்
காதலால் பைத்தியமாகியே..
புலம்பிய வார்த்தைகளைத்தான்
கவிதை என்று பாராட்டினர்
மண்ணை உயிராய் நேசித்தேன்
மண்ணை பிரிந்தேன் வலி உணர்ந்தேன்
கண்வழி சுமந்த நீரோடு தரையில் மீனாக
கனவில் கூட கதை படித்தேன்..
பெண்ணை மிதித்ததனால்
விண்தொட்டு எழுவீர் என்றே
கோபக்கனலோடு அணிசேர்த்து
எட்டயப்புரத்தானின் கனவை
மெய்ப்பிக்க கைப்பிடித்து நடந்தேன்..
பூவோடு பேசினேன் புயலோடு நடந்தேன்
மழையில் குளித்தேன்வெயில்காய்ந்தேன்
பறவையை கண்டேன் மொழி கேட்டேன்
புல்மீது தவழ்ந்தேன் மந்தமாருதம் தழுவ
பெண்மையின் நாணத்தோடு சிவந்தேன்.
தமிழ்த்தாயவள் கைபிடித்து நடைபயிலும்
குழந்தையாய் இங்கு மெய்யுரைத்தேன்
எளிமையில் புதுமையில் எம்மினமே
எம்சனமே சிந்தும் தமிழ்த்துளிகளை
சுவையென்றீர் அமுதென்றீர்
கவிதைச்சாரலென்றீர் இதுதானா
கவிதை என்றேன் கேள்விக்கணையோடு
கவிதைதின வாழ்த்துக்கள்....
ஆக்கம் ரதிமோகன்
ஆயிரம்பட்டாம்பூச்சிகள் பறக்க
உனைக்கண்டேன் உந்தன்
எழிலில் எனை தொலைத்தேன்
காதலால் பைத்தியமாகியே..
புலம்பிய வார்த்தைகளைத்தான்
கவிதை என்று பாராட்டினர்
மண்ணை உயிராய் நேசித்தேன்
மண்ணை பிரிந்தேன் வலி உணர்ந்தேன்
கண்வழி சுமந்த நீரோடு தரையில் மீனாக
கனவில் கூட கதை படித்தேன்..
பெண்ணை மிதித்ததனால்
விண்தொட்டு எழுவீர் என்றே
கோபக்கனலோடு அணிசேர்த்து
எட்டயப்புரத்தானின் கனவை
மெய்ப்பிக்க கைப்பிடித்து நடந்தேன்..
பூவோடு பேசினேன் புயலோடு நடந்தேன்
மழையில் குளித்தேன்வெயில்காய்ந்தேன்
பறவையை கண்டேன் மொழி கேட்டேன்
புல்மீது தவழ்ந்தேன் மந்தமாருதம் தழுவ
பெண்மையின் நாணத்தோடு சிவந்தேன்.
தமிழ்த்தாயவள் கைபிடித்து நடைபயிலும்
குழந்தையாய் இங்கு மெய்யுரைத்தேன்
எளிமையில் புதுமையில் எம்மினமே
எம்சனமே சிந்தும் தமிழ்த்துளிகளை
சுவையென்றீர் அமுதென்றீர்
கவிதைச்சாரலென்றீர் இதுதானா
கவிதை என்றேன் கேள்விக்கணையோடு
கவிதைதின வாழ்த்துக்கள்....
ஆக்கம் ரதிமோகன்
0 Kommentare:
Kommentar veröffentlichen