உதவாத கரை !கவிதை செல்பிநேசன்

செல்விகள் எல்லாம் இன்று
-----செய்தொழில் மற்றும் முறையே
கல்வி கற்றார்களோ இல்லையோ
-----கணத்துக்கு ஒருமுறை நன்றே
செல்பி எடுக்க மட்டும் நல்ல
-----சேர்டிபிக்கேட் பெற்றுவிட்டனர் .
குல்பி ஐசோடு கூடும் காதல் இன்றோ
-----கூடி நின்று விதவிதமாய் எடுக்கும்
செல்பியோடே சிநேகமாகி சிலநாளில்
----சீர்கெட்டு சீரழிந்தும் போகிறது
நிலவில் கூடிமகிழும் அன்றைய
-------நிஜக்காதல்கள் எல்லாம் இன்று
பகலில் பாசங்காக கூடுகிறது
------பளிச்சென படம் பிடிக்கவென்றே.
அழகில் மட்டுமே அக்கறை எம்மவர்
-----அன்பில் ஏனோ பாராமுகம் காட்டுகிறார்
உலவி வரப்போவது கூட இன்று
-----உலக அதிசயம் ஆகியது எமக்கு.
தலைவியின் நிலைவரத்தை அறிய
--தருதலை முகநூலிடம் கேட்கவேண்டியுள்ளது.
கலவி நேரக் காட்சியைகூட மிகவிரைவில்
---கழிசடைகள் வெட்கமின்றி முகநூலிலிடுவரோ?
உலகில் உள்ளக்காதல் இன்று
----உதவாக்க்கரையாய் உள்ள காதலானதோ ? .
 
ஆக்கம்  செல்பிநேசன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system