பேருந்து நெரிசலில்
பெண்ணொருத்தியை உரச நேர்கையில்
காம உணர்ச்சி காட்டாது
தாய்மை உணர்ச்சியை காட்டும்
ஆண்மை மனங்களை
அழகிய இத்தினத்தில் வாழ்த்துவோம்.
அழகு மங்கையொருத்தியின்
அந்தரங்க ஆடையது
வெளியரங்காய் தெரிந்தாலும்
தன் தங்கை அக்காவாய்
காண்பவளை கைகூப்பும்
கண்ணிய ஆண்களை
கன்னியரே வாழ்த்துங்கள்.
விதவையர் வீடுதேடி
வீண்வம்பு பேசாமல்
துணையென நின்று
தோள்கொடுக்கும்
தோழமை ஆண்களை
தூக்கிவைத்து வாழ்த்துவோம்.
கண்ணில் தெரியா
கன்னியுடன்
கைபேசியில் பேச நேர்கையிலும்
கண்ணியமாய் உரையாடும்
புண்ணியவான்களை
போற்றியே வாழ்த்துவோம்.
சமத்துவத்தில் வேறின்றி
அவளுக்கும்
அதிகாரம் கொடுக்கும்
அழகு உள்ளத்து கணவர்களை
அன்போடு வாழ்த்துவோம்.
முகநூலில் தினம்வந்து
முகம் காட்டும் மகளிரை
அகமதன் அந்தஸ்து நாற்காலியில்
அமரவைக்கும் ஆடவரை
ஆனந்தமாய் வாழ்த்துவோம்.
மார்ச் எட்டில் மாத்திரம்
மகளிரை ஏற்றாமல்
நாள் ஒவ்வொன்றிலும்
நன்மதிப்பு செய்யும்
நல்லாண்களை வாழ்த்துவோம்.
பணிக்கேற்ற ஊதியத்தை
பாவையவளுக்கும் கொடுக்கும்
பாரபட்சமில்லா எஜமான்களை
பண்போடு வாழ்த்துவோம்.
தன்னிலும் திறனான
பெண்ணவளை காண்கையிலே
தன்னிடத்தை கொடுத்துவிட்டு
தள்ளிநின்று மனமகிழும்
வெள்ளிபோன்ற வெளிச்சமுள
வெள்ளைமன ஆண்களை
நல்லனவே வாழ்த்துவோம்.
பெண்ணுக்கு சீதனத்தை
பெண்ணொருத்தி கேட்கையிலே
'என்னத்துக்கு வேண்டாம்' என
எடுத்தியம்பி அதை மறுக்கும்
சீர்மிகு தந்தையரை
சிரம்தாழ்த்தி வாழ்த்துவோம்.
எனை வாழ்த்த யாரேனும்
இங்கில்லையா என்றே
இதைப் படித்து
தனை திருத்தும்
ஒவ்வொரு ஆணையும்
மகளிர் தினமதில்
மாண்புற வாழ்த்துவோம்.
ஆக்கம் யோ.புரட்சி,
பெண்ணொருத்தியை உரச நேர்கையில்
காம உணர்ச்சி காட்டாது
தாய்மை உணர்ச்சியை காட்டும்
ஆண்மை மனங்களை
அழகிய இத்தினத்தில் வாழ்த்துவோம்.
அழகு மங்கையொருத்தியின்
அந்தரங்க ஆடையது
வெளியரங்காய் தெரிந்தாலும்
தன் தங்கை அக்காவாய்
காண்பவளை கைகூப்பும்
கண்ணிய ஆண்களை
கன்னியரே வாழ்த்துங்கள்.
விதவையர் வீடுதேடி
வீண்வம்பு பேசாமல்
துணையென நின்று
தோள்கொடுக்கும்
தோழமை ஆண்களை
தூக்கிவைத்து வாழ்த்துவோம்.
கண்ணில் தெரியா
கன்னியுடன்
கைபேசியில் பேச நேர்கையிலும்
கண்ணியமாய் உரையாடும்
புண்ணியவான்களை
போற்றியே வாழ்த்துவோம்.
சமத்துவத்தில் வேறின்றி
அவளுக்கும்
அதிகாரம் கொடுக்கும்
அழகு உள்ளத்து கணவர்களை
அன்போடு வாழ்த்துவோம்.
முகநூலில் தினம்வந்து
முகம் காட்டும் மகளிரை
அகமதன் அந்தஸ்து நாற்காலியில்
அமரவைக்கும் ஆடவரை
ஆனந்தமாய் வாழ்த்துவோம்.
மார்ச் எட்டில் மாத்திரம்
மகளிரை ஏற்றாமல்
நாள் ஒவ்வொன்றிலும்
நன்மதிப்பு செய்யும்
நல்லாண்களை வாழ்த்துவோம்.
பணிக்கேற்ற ஊதியத்தை
பாவையவளுக்கும் கொடுக்கும்
பாரபட்சமில்லா எஜமான்களை
பண்போடு வாழ்த்துவோம்.
தன்னிலும் திறனான
பெண்ணவளை காண்கையிலே
தன்னிடத்தை கொடுத்துவிட்டு
தள்ளிநின்று மனமகிழும்
வெள்ளிபோன்ற வெளிச்சமுள
வெள்ளைமன ஆண்களை
நல்லனவே வாழ்த்துவோம்.
பெண்ணுக்கு சீதனத்தை
பெண்ணொருத்தி கேட்கையிலே
'என்னத்துக்கு வேண்டாம்' என
எடுத்தியம்பி அதை மறுக்கும்
சீர்மிகு தந்தையரை
சிரம்தாழ்த்தி வாழ்த்துவோம்.
எனை வாழ்த்த யாரேனும்
இங்கில்லையா என்றே
இதைப் படித்து
தனை திருத்தும்
ஒவ்வொரு ஆணையும்
மகளிர் தினமதில்
மாண்புற வாழ்த்துவோம்.
ஆக்கம் யோ.புரட்சி,
0 Kommentare:
Kommentar veröffentlichen